சதாபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும்
பதினாறு பேறுகளிலே முக்கியமான
மூன்று என கருதப்படுபவை: ஆயுள், ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யம் ஆகும். அதிலும்
முதன்மையாக ஆயுளையே குறிப்பிடுகிறோம். முன்னொரு காலத்தில் 40 வருடங்கள்
மட்டுமே சராசரி ஆயுளாக இருந்த்து. அது சமயம் நீடித்த ஆயுளுடன் வாழுவதை
கொண்டாடும் விதமாக சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் போன்ற வைபவங்கள்
நடைமுறைபடுத்தப்பட்டன.
இதில் சஷ்டியப்த பூர்த்தி என்பது பொதுவாக 60
வயது பூர்த்தியாகும் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு, எண்ணிக்கையில்
தமிழ் வருடங்கள் 60 என்பதையும், அந்த 60 வருட முடிவில் நம் ஜென்ம
நட்சத்திரமும் திதியும் இணைந்து வருபதையும் காரணமாக குறிப்ப்பிடுகின்றனர்.
இதனால் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் கால அளவை பொறுத்தவரை இருவேறு
கருத்துக்கள் இல்லை.
ஆனால் இன்றும் சதாபிஷேகம் நடத்த வேண்டிய கால
அளவில் சிறிது மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவசரம் மற்றும் அவசியம்
கருதியோ என்னவோ சமீப காலங்களில் சதாபிஷேகம் என்பது 80 வயது முடிவிலேயே
கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம்
சதாபிஷேகம் என்பது 84 வயது பிறந்த தினத்தின் போது தான்
கொண்டாடப்பட்டுவந்தது.
பரமசிவனை வழிபடும் போது, அப்பர் சுவாமிகள்
'பித்தா பிறை சூடி பெருமானே' என்றே அழைக்கிறார். அமாவாசைக்கு மூன்றாவது
நாளான 'துவித்யை' திதியன்று தெரியும் பிறை சந்திரனையே பரமசிவன் தன் தலையில்
சூடியுள்ளான். இஸ்லாமிய மதத்தவரும் மூன்றாம் பிறை சந்திரனை கண்டபிறகே
ரம்லான் நோன்பை முடித்துக்கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
மூன்றாம் பிறை சந்திரனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் அத்துனை சிறப்பு
வாய்ந்ததாகக் கருதப்படுகிற்து. சதாபிஷேகம் என்பது 1008 முறை மூன்றாம் பிறை
கண்டவர்களை பரமசிவனாகவே பாவித்து கெளரவிப்பதற்காக கொண்டாடப்படுவது. ஆகவே,
சதாபிஷேகம் என்பது ஒருவர் பிறந்த நாளிலிருந்து வரும் 1008 'துவித்யை'
திதியை கணக்கிட்டு அதன் பின் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட
வேண்டும்.
பூமியை சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றிவருவதால்
சந்திரனின் சுற்றுப் பாதை ஒரு வட்டவளைய சுருள் (காயில்) போல் இருக்கும்.
சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் 27.32 நாட்களாகும். இதுவே
27 நட்சந்திரங்களாக பிரிக்கப்படுகின்றன. ஆகவேதான் நாம் திருக்கோயில்களில்
ஒரு வருடத்திற்கு நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்யச்சொல்லி
கொடுக்கும்போது 13 அர்ச்சனையாக கணக்கிடுகிறார்கள். இந்த நட்சத்திர சுற்று
கால அளவை ஆங்கிலத்தில் 'சைடுரியல் பீரியட்' என்றழைக்கின்றனர்.
திதி
என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சந்திரனின் திதி
சுழற்சியை ஆங்கிலத்தில் 'சைனோடிக் பீரியட்' என்றழைக்கின்றனர். இதற்கான கால்
அளவு (ஒரு குறிப்பிட்ட திதியிலிருந்து அடுத்த திதி வரை) 29.53
நாட்களாகும். ஒரு வருடம் என்பதை நாம் மிக சரியாக சொல்லவெண்டுமென்றால், அது
365 நாட்கள், 6 ம்ணி, 9 நிமிடம், 9 செகண்டுகளாகும். இதுவே 365.2425
நாட்களாகும்.
இப்போது சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம்:
ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக்கொள்ளவும்.
பிறந்த
நாளிலிருந்து அடுத்து வரும் 'துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது
முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.
அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். இதை முதல் 'துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம்.
அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.
உங்கள் ஜாதகப்படி நீங்கள் 1941 ஆம் ஆண்டு வைகாசி கிருஷ்ணபட்ச நவமி திதியில் பிறந்துள்ளீர்கள். அதற்கு அடுத்த சுக்லபட்ச துவிதீயை 9
8 வது நாள். எனவே
1007×29.53=29736.71+8=29744.71.
இந்த தினத்தில் நீங்கள் 1008 வது பிறை சந்திரனை பார்ப்பீர்கள். இதற்கு
அடுத்து வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.
உதாரணமாக 19/05/1941 ல் பிறந்துள்ள ஒருவருக்கு சதாபிஷேகம் எப்போது என்று தெரிந்து கொள்வோம்.
இவர் பிறந்த வருடத்தில் மீதமுள்ள நாட்கள் 226.
1942 - 2021 வரை 20 லீப் வருடங்கள் 20×366=7320 நாட்கள்.
1942 - 2021 வரை 60 சாதாரண வருடங்கள் 60×365=21900 நாட்கள்
இதுவரை 21900+7320=29220 நாட்கள்
இந்த வருடத்தில் வைகாசி சுக்லபட்ச த்ருதீயை 13/06/2021. அதுவரை 163 நாட்கள்.
So 29220+163=29383.
சரியாக 28/12/2022 அன்று இவர் பிறந்த நட்சத்திரம் சதயம். அன்றுடன் 29746 ஆவது நாள்.
ஆனால் தற்போது எல்லோரும் 80 ஆவது பிறந்த நாளையே கொண்டாடுகிறார்கள்.
கருத்துகள்